search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாமல்லபுரத்தில் இயல்பு நிலை திரும்பியது: சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கினர்
    X

    மாமல்லபுரத்தில் இயல்பு நிலை திரும்பியது: சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கினர்

    • புயல் தாக்கத்தால் மாமல்லபுரத்தில் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக கனமழை பெய்தது
    • அனைத்து வழித்தடங்களில் இருந்தும் பஸ்கள் இயங்கி வருவதால் இயல்பு நிலை திரும்பி சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கி உள்ளனர்.

    "மிச்சாங்" புயல் தாக்கத்தால் மாமல்லபுரத்தில் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை இன்றி மாமல்லபுரம் புராதன சின்னம் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    தற்போது அனைத்து வழித்தடங்களில் இருந்தும் பஸ்கள் இயங்கி வருவதால் இயல்பு நிலை திரும்பி சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கி உள்ளனர். அதனால் கடற்கரை கோவில் சாலை, ஐந்துரதம், அர்ச்சுனன்தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வைத்திருந்த சாலையோர கடைகள் திறக்கப்பட்டது.

    கடைகளின் உள்ளே மழையால் ஈரமான தொப்பி, பொம்மைகளை வியாபாரிகள் வெயிலில் காயவைத்து வருகின்றனர். பக்கிங்காம் கால்வாயில் தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கால்வாய் கரையோர தெருக்கள் மற்றும் அப்பகுதி கட்டிடங்கள் இன்னும் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன.

    Next Story
    ×