என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் இன்று மிக கனமழை இருக்காது- ஆபத்து விலகியது
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா நோக்கி நகர்வதால் சென்னைக்கு ஆபத்து விலகியது.
- இன்று மழை பெய்யும். ஆனால் அதீத கனமழை இருக்காது.
தென்மேற்கு வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 440 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ. வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கே 460 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநிலத்தின் நெல்லூருக்கு கிழக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை, சென்னைக்கு அருகாமையில் நாளை கரையை கடக்கும்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா நோக்கி நகர்வதால் சென்னைக்கு ஆபத்து விலகியது.
இந்நிலையில் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது:
சென்னையில் நேற்று பெய்த மிக கனமழை இன்று இருக்காது. மேகக்கூட்டங்கள் வடக்கு நோக்கி நகர்ந்ததால், மழை குறைந்தது.
இன்று மழை பெய்யும். ஆனால் அதீத கனமழை இருக்காது. சென்னையில் மழை விட்டு விட்டு தொடரும். மிக கனமழை இருக்காது.
நாளை, நாளை மறுநாளும் மழை தொடரும். ஆனால் அதீத மழை இருக்காது என்று தெரிவித்துள்ளார்.






