search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நகைக்கடையில் இலவசமாக நகை-பணத்தை பெற்றுச்சென்ற நிர்வாண சாமியார்
    X

    கடை உரிமையாளரை நிர்வாண சாமியார் ஆசீர்வதித்த காட்சி.

    நகைக்கடையில் இலவசமாக நகை-பணத்தை பெற்றுச்சென்ற நிர்வாண சாமியார்

    • கடைக்குள் வந்த ஒரு சிலர் நிர்வாண சாமியாரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
    • நிர்வாண சாமியார் தனது கழுத்தில் அணிய ஒரு தங்க செயின் வேண்டும் என்று கடை ஊழியரிடம் கூறி உரிமையாளரிடம் சொல்லச் சொன்னார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில்-ராஜபாளையம் மெயின் சாலையில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் ஆசிரமம் நடத்தி வரும் நிர்வாண சாமியார் ஒருவர் 30 நாள் புனித யாத்திரையாக ராமேஸ்வரம், கன்னியா குமரி செல்வதற்காக வந்த வழியில் இந்த கடைக்குள் சென்றுள்ளார்.

    அவர், கடை உரிமையாளரிடம் தான் ஹரித்துவாரில் இருந்து வருவதாகவும், இந்த பகுதியை கடக்க முயன்றபோது திடீரென எனக்கு கடவுள் அருள்வாக்கில் கேட்டதாகவும், அதில் உங்கள் நகைக்கடைக்கு சென்று உங்களை ஆசீர்வாதம் செய்துவிட்டு போ என கூறியதாகவும், அதனாலே தங்களது கடைக்கு தங்களை ஆசீர்வாதம் செய்வதற்காக வந்ததாகவும் கூறியுள்ளார்.

    இதனால் உரிமையாளரும், பணியாளர்களும் செய்வது அறியாது திகைத்துப் போய் நின்றனர். தொடர்ந்து நிர்வாண சுவாமியை கும்பிட்டு வரவேற்று அமர செய்தனர். அப்போது கடைக்குள் வந்த ஒரு சிலர் நிர்வாண சாமியாரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

    தொடர்ந்து கடையின் உரிமையாளர், நிர்வாண சாமியாரின் வழிச் செலவுக்காக சிறிய தொகையை கொடுக்க, அதனை பெற்றுக்கொண்ட நிர்வாண சாமி இது தனக்கு பூஜைக்கு உண்டான செலவு என்றும், என்னுடைய ஆசீர்வாதம் கிடைத்தால் நீ மிகப்பெரிய ஆளாய் வருவாய் எனக்கூறி நான் உனக்கு ஆசீர்வாதம் செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டே கடையின் உள்ளே நகைகள் இருக்கும் பகுதிக்கு உரிமையாளரை போகுமாறு கூறினார். பின்னர் இருக்கையில் இருந்து எழுந்து வந்து உரிமையாளரின் தலையில் கை வைத்து மீண்டும் ஒரு முறை ஆசீர்வாதம் செய்தார். தொடர்ந்து, நிர்வாண சாமியார் தனது கழுத்தில் அணிய ஒரு தங்க செயின் வேண்டும் என்று கடை ஊழியரிடம் கூறி உரிமையாளரிடம் சொல்லச் சொன்னார். அதைக் கேட்ட உரிமையாளர் சில நொடிகள் அதிர்ச்சி அடைந்தாலும் சுதாரித்துக் கொண்டு ஒரு பவுன் மதிப்புள்ள தங்க செயினை நிர்வாண சாமியாரிடம் கொடுப்பதற்காக எடுத்தார். அந்த செயின் வேண்டாம் பெரிய செயின் எடுங்கள் என்று நிர்வாண சாமியார் கையசைத்து கூறினார்.

    ஆனால் கடையின் உரிமையாளர் ஒரு பவுன் மதிப்புள்ள தங்க செயினை மட்டும் நிர்வாண சாமியாரின் கழுத்தில் அணிவித்தார். அதனை பெற்றுக்கொண்ட நிர்வாண சாமியார் தங்க செயின் மற்றும் பணத்தோடு வெளியே சென்றார். வட இந்திய சாமியார் தமிழகத்திற்கு வந்து பணம் மற்றும் நகையை லாவகமாக வாங்கிக் கொண்டு சென்ற சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×