என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சிறுபான்மையினர் நலன்... திமுக அரசு முன்னோடி: மு.க.ஸ்டாலின்
- ஒன்றிய அமைச்சர் ஒருவர், "பிரிவினையைத் தூண்டுகிறது திராவிட மாடல்" என்று சொல்லி இருக்கிறார்.
- மாவட்ட காஜிகளுக்கு மாதந்தோறும் ரூ.20,000 மதிப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை:
சென்னை தலைமை செயலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
* எல்லோருக்கும் என்பதில் பெரும்பான்மையும் உண்டு, சிறுபான்மையும் உண்டு.
* திராவிட மாடல் என்பது யாரையும் பிரிக்காது. பிளவுபடுத்தாது, உயர்வு தாழ்வு கற்பிக்காது.
* ஒன்றிய அமைச்சர் ஒருவர், "பிரிவினையைத் தூண்டுகிறது திராவிட மாடல்" என்று சொல்லி இருக்கிறார்.
* அனைவருக்கும் அனைத்தையும் கிடைக்கச் செய்யும் ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சியாகும்.
* சிறுபான்மையினரின் நலனை பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும் முன்னோடியாக உள்ளது திமுக அரசு.
* சிறுபான்மையினரின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு ஆதரவு வழங்கி வருவது திமுக அரசு.
* சிறுபான்மையினரின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் திமுக அரசு.
* 2007-ல் சிறுபான்மையினர் நல இயக்குநரகம் உருவாக்கியது முன்னாள் முதல்வர் கருணாநிதி.
* உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியங்கள் மூலம் பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
* 5 மாவட்டங்களில் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் உருவாக்கம்.
* 2023ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட 3,987 பயனாளிகளுக்கு ரூ.10 கோடி நிதி உதவி.
* மாவட்ட காஜிகளுக்கு மாதந்தோறும் ரூ.20,000 மதிப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
* எண்ணற்ற திட்டங்களை சிறுபான்மையினர் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
* 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் சேர்ப்பதற்கான அரசாணை.
* சிறுபான்மையின மாணவர்களுக்கு 5 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும்.
* சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு வாழ்நாள் அங்கீகாரம் விரைவில் வழங்கப்படும்.
* 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் இஸ்லாமிய மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை.
* சிறுபான்மையின நலத்துறை சார்பில் தற்போது அறிவிக்கப்பட்ட உத்தரவுகள் உடனடியாக அமல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.






