search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மு.க.ஸ்டாலின் சிறந்த முறையில் ஆட்சி நடத்தி வருகிறார்- வைகோ
    X

    வைகோ

    மு.க.ஸ்டாலின் சிறந்த முறையில் ஆட்சி நடத்தி வருகிறார்- வைகோ

    • மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு பல்வேறு சமூக நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறது.
    • தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு காந்தி ஜெயந்தி அன்று பேரணி நடத்த தகுதியற்றது.

    அவனியாபுரம்:

    மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி உயர்வை குறைத்திருக்க வேண்டும்.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டுகின்ற வகையில் நடவடிக்கை எடுத்து சிறந்த முறையில் ஆட்சி நடத்தி வருகிறார்.

    மத்திய அரசால் இன்று தடை செய்யப்பட்டுள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு பல்வேறு சமூக நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறது.

    வெள்ள காலங்களிலும், தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளிலும் சமூக நலம் கருதி தொண்டாற்றி இருக்கிறது. இந்த அமைப்பு மீது சில இடங்களில் நடந்த வன்முறையை காரணம் காட்டி இருக்கிறது.

    தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு காந்தி ஜெயந்தி அன்று பேரணி நடத்த தகுதியற்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×