search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் சிவசங்கர்
    X

    போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் சிவசங்கர்

    • அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படும் பேருந்துகள் கொரோனா காரணமாக நிறுத்தப்படவில்லை.
    • தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு ஓட்டுநர்களை நியமனம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சட்டசபையில் இன்று வினாக்கள் விடைகள் நேரத்தில், பேராவூரணி - பட்டுக்கோட்டை இடையே கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்படுமா என பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படும் பேருந்துகள் கொரோனா காரணமாக நிறுத்தப்படவில்லை. போதிய ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இல்லாத காரணத்தினால் தான் அந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு ஓட்டுநர்களை நியமனம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மற்ற போக்குவரத்து கழகங்களுக்கு பணியாளர்களை நியமனம் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டவுடன் நிறுத்தப்பட்ட வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×