search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மகாத்மா காந்தி நினைவு தினம்: திமுக அலுவலகத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு
    X

    மகாத்மா காந்தி நினைவு தினம்: திமுக அலுவலகத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

    • மகாத்மா காந்தியின் 77வது நினைவு தினமான இன்று அண்ணா அறிவாலயத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மதவெறியை விலக்கி மத நல்லிணக்கம் பேணுவோம் என்று உறுதிமொழி வாசிக்கப்பட்டது.

    சென்னை:

    காந்தியடிகள் நினைவு நாளை மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்க திமுக முடிவு செய்திருந்தது. அதன்படி, மத வெறியர்களால் காந்தி கொல்லப்பட்ட நாளை மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

    தமிழகம் முழுவதுமே திமுக சார்பில் இன்று மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் மகாத்மா காந்தியின் 77வது நினைவு தினமான இன்று திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உறுதிமொழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

    மக்கள் அனைவரும் மத வேறுபாடு இன்றி ஒற்றுமையாக வாழ்ந்திட வலியுறுத்தியும், மதவெறியை விலக்கி மத நல்லிணக்கம் பேணுவோம் என்றும் உறுதிமொழி வாசிக்கப்பட்டது.

    Next Story
    ×