என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கிளாம்பாக்கம் பேருந்து முனையம்: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
- கிளாம்பாக்கத்தை தேர்வு செய்ததே அதிமுக ஆட்சியில் தான்
- வடசென்னை மக்களுக்காக மாதவரத்தில் இருந்து 20 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சென்னை:
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம் தொடர்பாக சட்டசபையில் இன்று விவாதம் நடைபெற்றது.
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சட்டசபையில் கேள்வி எழுப்பினார். அவர் கூறுகையில்,
* கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் பயணிகளுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. அதிகாலையில் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள்.
* தென் மாவட்டங்களில் இருந்து வரும் மக்களை சென்னையின் உள்ளே இறக்கி விட வேண்டும் என்று கூறினார்.
இதற்கு அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:
* கிளாம்பாக்கத்தை தேர்வு செய்ததே அதிமுக ஆட்சியில் தான்.
* பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடித்து செயல்பாட்டிற்கு கொண்டுவந்தது திமுக அரசு.
* பேருந்தில் பயணம் செய்யும் மக்கள் யாரும் புகார் கூறவில்லை. பேருந்தில் பயணம் செய்யாதவர்கள் தான் புகார் கூறி வருகின்றனர்.
* அதிமுக ஆட்சியில் 30 சதவீத பணிகள் தான் நிறைவு பெற்றிருந்தது.
* கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்து எண்ணிக்கை குறைவு என்பது தவறான குற்றச்சாட்டு.
* வடசென்னை மக்களுக்காக மாதவரத்தில் இருந்து 20 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகிறது.
* கிளாம்பாக்கத்தில் தென்மாவட்டம் உள்பட அனைத்து பகுதிகளுக்கும் போதுமான பேருந்து வசதிகள் உள்ளன.
* கிளாம்பாக்கம் பேருந்து முனையம் முழுமையாக செயல்பட்டு வருகிறது.
* செல்லூர் ராஜூ விரும்பினால் அவரை நேரடியாக அழைத்து செல்ல தயார் என்று அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்