search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காஞ்சிபுரம் கல்லூரி மாணவியின் கழுத்தை நெறித்த காதலன்- கர்ப்பத்தை கலைக்க மறுத்ததால் ஆத்திரம்
    X

    காஞ்சிபுரம் கல்லூரி மாணவியின் கழுத்தை நெறித்த காதலன்- கர்ப்பத்தை கலைக்க மறுத்ததால் ஆத்திரம்

    • மாணவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அணக்காவூர் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

    செய்யாறு:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நாகவேடு பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது மாணவி.

    இவர் காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தோழியின் வீட்டிற்கு அடிக்கடி சென்றார்.

    அப்போது தோழியின் உறவினரான 19 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். அந்த வாலிபர் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

    இதில் மாணவி கர்ப்பமானார். அந்த வாலிபர் கருவை கலைக்குமாறு கூறினார்.

    மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். இந்நிலையில் வாலிபர் நேற்று பகல் செய்யாறு அடுத்த நெடுங்கல் கிராமம் அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு மாணவியை அழைத்துச் சென்றார். பின்னர் மாணவியை கோவில் பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவருக்கும் திருமணம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் பெல்டால் மாணவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்தார்.

    மாணவியின் கூச்சல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். பொதுமக்கள் வருவதை கண்ட வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

    பின்னர் மாணவியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அணக்காவூர் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

    மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×