search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இரட்டை இலை சின்னம் நிச்சயம் எங்களுக்கே கிடைக்கும்- ஜெயக்குமார் விளக்கம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    இரட்டை இலை சின்னம் நிச்சயம் எங்களுக்கே கிடைக்கும்- ஜெயக்குமார் விளக்கம்

    • அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடும்.
    • சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் தடை ஏதும் விதிக்கவில்லை.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட போவதாக அறிவித்துள்ளது.

    ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அணி தனியாக செயல்படுவதால் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    ஆனால் அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடும். சின்னம் தங்களுக்கு கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக முறைப்படி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட விபரத்தை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து விட்டோம். தேர்தல் ஆணையமும் அதை ஏற்றுக்கொண்டுள்ளது.

    சென்னை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சும் பொதுக்குழு செல்லும் என்றும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் அறிவித்துள்ளது.

    தற்போது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் தடை ஏதும் விதிக்கவில்லை. எனவே வேட்பாளருக்கு வழங்கப்படும் ஏ மற்றும் பி படிவங்களில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடுவார். இரட்டை இலை சின்னமும் எங்களுக்கு கிடைக்கும். இதில் எந்த சிக்கலுக்கும் இடம் இல்லை.

    இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.

    அ.தி.மு.க. சட்டத்துறை உறுப்பினர் வக்கீல் இன்பதுரை கூறும்போது, 'கட்சி இரண்டாக பிளவுபடவில்லை. முறைப்படி எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு மூலம் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கட்சியின் பெரும்பான்மை எங்களிடம் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

    கட்சி அலுவலகமும் எங்கள் வசமே இருக்கிறது. அதிகாரப்பூர்வமாக இணையதள முகவரியையும் நாங்களே பயன்படுத்துகிறோம். வரவு செலவு கணக்கை தாக்கல் செய்ததையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுவிட்டது. எனவே இரட்டை இலையை நாங்கள் பெறுவதில் எந்த பிரச்சினையும் கிடையாது' என்றார்.

    Next Story
    ×