search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு விழா: மாற்றுத்திறனாளிகள் கண்டுகளிக்க சிறப்பு ஏற்பாடு
    X

    ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு விழா: மாற்றுத்திறனாளிகள் கண்டுகளிக்க சிறப்பு ஏற்பாடு

    • ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் திறந்து வைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளை ரசித்து பார்க்கிறார்.
    • மாற்றுத்திறனாளிகள் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் வகையில் மதுரை மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் ரூ.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளை ரசித்து பார்க்கிறார்.

    இந்தநிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை காண மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட கலெக்டரிடம் நேரில் மனு அளித்தனர். அவர்கள் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் வகையில் மதுரை மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் முதல் முறையாக பார்ப்பதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×