search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை- தமிழக அரசு ஆணை
    X

    போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை- தமிழக அரசு ஆணை

    • கொரோனா காலத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களை சிறப்பிக்கும் வகையில், சிறப்பு ஊக்கத் தொகை.
    • முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    போக்குவரத்து தொழிலாளர்களின் சிறப்பு ஊக்கத் தொகை, 14வது ஊதிய ஒப்பந்தத்தின்படி ஊதிய நிலுவைத் தொகையை வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

    ஜனவரி 2022ம் ஆண்டு முதல் ஜூலை 2022 வரை உள்ள காலத்திற்கான ஊதிய நிலுவைத் தொகையான ரூ.171.05 கோடி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா காலத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களை சிறப்பிக்கும் வகையில், சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.17.15 கோடியை வழங்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மேலும், முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×