search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஐஐடி மெட்ராஸ் தங்கும் விடுதியில் மேலும் ஒரு மாணவர் உயிரிழப்பு - போலீஸ் விசாரணை!
    X

    ஐஐடி மெட்ராஸ் தங்கும் விடுதியில் மேலும் ஒரு மாணவர் உயிரிழப்பு - போலீஸ் விசாரணை!

    • இம்மாத துவக்கத்தில் 32 வயதான பிஎச்டி மாணவர் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
    • மார்ச் மாத வாக்கில் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர் இதே வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

    ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் உள்ள தங்கும் விடுதி அறையில் மாணவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மாணவர் மரணம் தற்கொலையாக இருக்க வாய்ப்புகள் இருப்பதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    உயிரிழந்த மாணவர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் இரசாயன பொறியியல் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். உயிரிழந்த மாணவர் உடலை மீட்ட காவல் துறையினர் விசாரணையை துவங்கியுள்ளனர்.

    விசாரணையில் இந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார் என்று உறுதி செய்யப்பட்டால், இந்த ஆண்டு ஐஐடி மெட்ராஸ்-இல் பதிவான நான்காவது தற்கொலை சம்பவமாக இது இருக்கும். முன்னதாக இம்மாத துவக்கத்தில் 32 வயதான பிஎச்டி மாணவர் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக மார்ச் மாதத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர் இதே வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார். 20 வயதான இந்த மாணவர் ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இதுதவிர பிப்ரவரி மாதத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஆய்வு மாணவர் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

    Next Story
    ×