search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் வீட்டு வாடகை 15 சதவீதம் வரை உயர்வு
    X

    சென்னையில் வீட்டு வாடகை 15 சதவீதம் வரை உயர்வு

    • சென்னையில் புலம் பெயர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வீட்டு வாடகை உயர்கிறது.
    • வீட்டு வாடகை உயர்த்துவதற்கு முக்கிய காரணமே சொத்து வரி கூட்டப்பட்டதுதான்.

    சென்னை:

    சென்னையின் மையப் பகுதிகளை நோக்கி மக்கள் நகர்ந்து வருவதால் வீடுகளுக்கு தேவை அதிகரிக்கிறது. இதனால் வீட்டு வாடகை உயர்ந்துள்ளது.

    சென்னையின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் தேவை தொடர்ந்து இருக்கும் நிலையில் மாதவரம், கொளத்தூர், பெரம்பூர் உள்ளிட்ட மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் தேவை அதிகரித்துள்ளது.

    மேலும் சிறந்த வேலைவாய்ப்புகள், வீட்டில் இருந்து வேலை செய்தல் மற்றும் தனி குடும்பங்களின் அதிகரிப்பு காரணமாக வீடுகளின் தேவை கூடியுள்ளது. இதனால் வீட்டு வாடகை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்தன. மேலும் வாடகை உயர்வுக்கு சொத்து வரி உயர்வு ஒரு முக்கிய காரணமாகும். அதே நேரத்தில் புறநகர் பகுதிகளில் இருந்து மக்கள் உள் நோக்கி மாறுவது மற்றொரு முக்கிய காரணமாகும்.

    சென்னையில் புலம் பெயர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வீட்டு வாடகை உயர்கிறது. வெளிநாடுகளில் உள்ளவர்கள் தங்கள் முதலீடுகளை வீடுகளில் செய்து வாடகைக்கு விடுகின்றனர். பழைய வீடுகளை மேம்படுத்தி அதிக வாடகைக்கு விடும் நிலை உள்ளது.

    சென்னையில் முக்கிய பகுதிகளான நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, ஆர்.ஏ. புரம் போன்ற பகுதிகளில் புதிய பிரீமியம் வீடுகளுக்கான வாடகை ரூ.75 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை உள்ளதாக சொத்து ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். மயிலாப்பூர், மந்தைவெளியின் பழைய பகுதிகளில் கட்டிடங்கள் பழமையானவை. அவற்றில் வசதிகள் குறைவாகவே உள்ளன. இங்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை வாடகை உள்ளது. மற்ற பகுதிகளில் 2 மற்றும் 3 படுக்கை அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வாடகை உள்ளது.

    வீட்டு வாடகை உயர்த்துவதற்கு முக்கிய காரணமே சொத்து வரி கூட்டப்பட்டதுதான். கே.கே.நகர், அண்ணா நகர் போன்ற பகுதிகளில் பழைய சொத்துக்களை பெரிய அளவில் மறு சீரமைப்பு செய்வதால் உரிமையாளர்கள் தற்காலிகமாக வாடகை வீடுகளை தேடுகிறார்கள். இதுபற்றி ரியல் எஸ்டேட் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் சந்திரசேகர் கூறும் போது, மெட்ரோ ரெயில் இணைப்பு நிறைய வேலை வாய்ப்புள், சமூக உள் கட்டமைப்பு ஆகியவை மக்களை நகரத்தை விட்டு வெளியேற ஊக்குவிப் பதோடு அந்த பகுதிகளில் வாடகை தேவையும் அதிகரித்து வருகிறது என்றார்.

    Next Story
    ×