search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி- 4 மாத குழந்தையும் உயிரிழந்த சோகம்
    X

    லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி- 4 மாத குழந்தையும் உயிரிழந்த சோகம்

    • வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் நின்றிருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.
    • கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்கா, செ.நாச்சிபட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராம ஜெயம் (வயது38). டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ரத்னா(30). இவர்களது மகள்கள் ராஜலட்சுமி(5), தேஜாஸ்ரீ(2), மற்றும் 4 மாத ஆண் கைக்குழந்தை இருந்தது.

    ரத்னா தனது கடைசி மகன் பிரசவத்தையொட்டி 2 மகள்களுடன் சென்னையில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார்.

    இந்நிலையில் சென்னையில் உள்ள மாமனார் வீட்டில் தங்கி இருந்த மனைவி மற்றும் மகள்கள், குழந்தையை அழைத்து வர ராமஜெயம் முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து நேற்று மாலை அவர் தனது சித்தப்பா மகன் ராஜேஷ் என்பவருடன் சென்னைக்கு காரில் வந்தார். பின்னர் அவர்கள் ரத்னா, மகள்கள் ராஜலட்சுமி, தேஜாஸ்ரீ, மற்றும் 6 மாத கைக்குழந்தை ஆகியோரை காரில் அழைத்துக் கொண்டு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    காஞ்சிபுரம் அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சித்தேரி மேடு பகுதியில் நள்ளிரவு 12 மணியளவில் கார் சென்று கொண்டு இருந்தபோது சாலையோரத்தில் சரக்கு லாரி ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் நின்றிருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் காரின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கிய ராமஜெயத்தின் மனைவி ரத்னா, அவரது மகள்கள் ராஜலட்சுமி, தேஜாஸ்ரீ, மற்றும் 4 மாத கைக்குழந்தை மற்றும் ராஜேஷ், ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.

    காரை ஓட்டி வந்த ராம ஜெயம் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பாலு செட்டி சத்திரம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த ராமஜெயத்தை மீட்பு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பலியான ரத்னா உள்பட 5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. பலியானவர்களின் உடல்களை பார்த்து அவர்களது உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.மேலும் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிறுநேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. சரக்கு லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×