search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் 80 ஆம்னி பஸ்கள் பறிமுதல்: தீபாவளி வரை அதிரடி நடவடிக்கைகளை தொடர முடிவு
    X

    சென்னையில் 80 ஆம்னி பஸ்கள் பறிமுதல்: தீபாவளி வரை அதிரடி நடவடிக்கைகளை தொடர முடிவு

    • கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.
    • விதி மீறல்கள் தொடர்பாக ஆம்னி பஸ் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.17 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ரெயில்களில் டிக்கெட் கிடைக்காத நிலையில் ஆம்னி பஸ்களில் பயணம் செய்வார்கள்.

    சொந்த ஊர்களுக்கு மக்கள் முண்டியடித்து செல்வதால் எவ்வளவு கட்டணத்தை நிர்ணயித்தாலும் அதனை செலுத்தி டிக்கெட் எடுத்து விடுவார்கள் என்று கணக்கு போடும் ஆம்னி பஸ் நிறுவனங்கள் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் ஆயுத பூஜை விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் மக்களை குறி வைத்து ரூ.2 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரம் வரையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதே போன்று தீபாவளிக்கு ஊருக்கு செல்பவர்களிடமும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது போன்று கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.

    இதன்படி போக்குவரத்துதுறை அதிகாரிகள் கூடுதல் கட்டணம் வசூல், அனுமதியின்றி பஸ்களை இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்ட ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக கடந்த 18-ந் தேதி முதல் ஆம்னி பஸ்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் 5 ஆயிரம் பஸ்கள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்ட 70 பஸ்கள் ஏற்கனவே பறிமுதல் செய்யபட்டிருந்தன.

    இந்நிலையில் இன்று காலையிலும் கோயம்பேட்டில் ஆம்னி பஸ்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன. இதில் 10-க்கும் மேற்பட்ட பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம் கடந்த 18-ந் தேதியில் இருந்து இன்று வரை 4 நாட்களில் 80 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த விதி மீறல்கள் தொடர்பாக ஆம்னி பஸ் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.17 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் இது போன்ற அதிரடி நட வடிக்கைகளை தொடர்ச்சி யாக மேற்கொள்ளவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    ஆம்னி பஸ்கள் மீது மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளை தொடர்ச் சியாக மேற்கொண்டு பஸ் கட்டணத்தை குறைப்பதற்கு அதிகாரிகள் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×