search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விடிய விடிய பலத்த மழை: சென்னை குடிநீர் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    விடிய விடிய பலத்த மழை: சென்னை குடிநீர் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    • திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது.
    • சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று மாலை கருமேகங்கள் திரண்டு திடீரென பலத்த மழை கொட்டியது. பின்னர் விட்டு விட்டு நீடித்த மழை இரவு பலத்த மழையாக பெய்தது.

    விடிய விடிய கனமழையாக கொட்டித் தீர்த்தது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி. இதில் 2698 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 622 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. சென்னை குடிநீர் தேவைக்காக 159 கன அடி வெளியேற்றப்படுகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கன அடி. இதில் 1700 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 200 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 70 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி. இதில் 1955 மி.கன அடி தண்ணீர் உள்ளது. 190 கன அடி தண்ணீர் ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது. 189 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு பஸ் நிலையம் சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.

    இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. பலத்த மழை காரணமாக கடந்த சில நாட்களாக நீடித்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

    Next Story
    ×