search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஏற்காட்டில் 4 மணி நேரம் கொட்டிய கனமழை: கடும் குளிரால் மக்கள் தவிப்பு
    X

    ஏற்காட்டில் 4 மணி நேரம் கொட்டிய கனமழை: கடும் குளிரால் மக்கள் தவிப்பு

    • மழையை தொடர்ந்து பனி மூட்டம் நிலவி வருகிறது.
    • ஏற்காட்டில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் காபி தோட்ட தொழிலாளர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    குறிப்பாக ஏற்காட்டில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது. நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய மழை 6 மணி வரை கனமழையாக கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    பின்னர் நள்ளிரவு 12 மணி வரை சாரல் மழையாக நீடித்தது. மழையை தொடர்ந்து பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடும் குளிரால் ஏற்காட்டில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் காபி தோட்ட தொழிலாளர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சேலம் புறநகர் மாவட்ட பகுதிகளான தலைவாசல், காடையாம்பட்டி, ஆனைமடுவு உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளித்தது. சேலம் மாநகரில் லேசான சாரல் மழை பெய்தது. தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 35 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. தலைவாசல் 19, காடையாம்பட்டி 14, ஆனைமடுவு 13, ஆத்தூர் 5.2, மேட்டூர் 44, சங்ககிரி 4.3, கரியகோவில் 4, ஓமலூர் 2, சேலம் 0.3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 101.2 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    Next Story
    ×