என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    3 மாணவ-மாணவிகளுக்காக செயல்படும் அரசு பள்ளிக்கூடம்
    X

    3 மாணவர்களே படிக்கும் பி.ராமநாதபுரம் அரசுப்பள்ளியை காணலாம்

    3 மாணவ-மாணவிகளுக்காக செயல்படும் அரசு பள்ளிக்கூடம்

    • பாடம் சொல்லித்தர ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார்.
    • பள்ளியில் அனைத்து அடிப்படை வசதிகளும் இருந்தும் மாணவர் சேர்க்கை இல்லை.

    மதுரை:

    மதுரை மாவட்டம் பி.ராமநாதபுரத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் இந்த கல்வி ஆண்டில் 1, 3, 5 ஆகிய வகுப்புகளில் தலா ஒருவர் மட்டுமே படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாடம் சொல்லித்தர ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். அவர்தான் பள்ளியின் தலைமை ஆசிரியரும் கூட. சிறுமிகள் முறையே 3 மற்றும் 5-ம் வகுப்புகளும், சிறுவன் ஒன்றாம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

    மேலும் இந்த 3 மாணவர்களுக்கும் அருகில் பாப்பையாபுரத்தில் உள்ள பள்ளியில் இருந்து காலை உணவு திட்டம் மூலம் உணவு சமைத்துக் கொண்டு வரப்படுகிறது. மதிய உணவு அருகில் உள்ள சிலைமலைபட்டியில் இருந்து கொண்டு வரப்படுகிறது. பள்ளியில் அனைத்து அடிப்படை வசதிகளும் இருந்தும் மாணவர் சேர்க்கை இல்லை.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "எங்கள் கிராமத்தில் 150 பேர் வசித்து வருகிறோம். ஆனால் பெரும்பாலானோர் வேலைக்காக குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டனர். அதனால் குறைந்த அளவே மக்கள் வசித்து வரும் நிலையில் பள்ளி செல்லும் மாணவர்கள் அதிகம் இல்லாததால் சேர்க்கை குறைவாக உள்ளது" என்றனா்.

    Next Story
    ×