search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொடர்ந்து உச்சத்தில் தங்கம் விலை: ரூ.54 ஆயிரத்தை தாண்டியது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தொடர்ந்து உச்சத்தில் தங்கம் விலை: ரூ.54 ஆயிரத்தை தாண்டியது

    • தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை பதிவு செய்து வருகிறது.
    • வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை மீண்டும் ஏற்றத்துடனேயே பயணிக்க தொடங்கி இருக்கிறது. கடந்த 5-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.52 ஆயிரத்தை தாண்டியது. அதனைத் தொடர்ந்து விலை அதிகரித்து கொண்டே வந்து, ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை பதிவு செய்து வருகிறது. அந்தவகையில் நேற்றும் அதன் விலை உயர்ந்திருந்தது.

    அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 705-க்கும், ஒரு பவுன் ரூ.53 ஆயிரத்து 640-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 725-க்கும், ஒரு பவுன் ரூ.53 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் இன்று ஒரு பவுன் ரூ.54 ஆயிரத்தை தாண்டியது. ஒரு பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54 ஆயிரத்து 440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6 ஆயிரத்து 805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 50 காசு அதிகரித்து 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Next Story
    ×