search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வரலாற்றிலேயே முதல்முறையாக ரூ.48 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை
    X

    வரலாற்றிலேயே முதல்முறையாக ரூ.48 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை

    • தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
    • வெள்ளி விலை அதிகரித்துள்ளது.

    சென்னை:

    தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில், நேற்று சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 47 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

    இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. வரலாற்றிலேயே முதல்முறையாக தங்கம் விலை சவரன் ரூ.48 ஆயிரத்தை தாண்டியது.

    இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து 48 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 20 காசுஅதிகரித்து 78 ரூபாய்க்கு 20 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.78,200-க்கு விற்பனையாகிறது.

    Next Story
    ×