search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிவகாசி அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து
    X

    சிவகாசி அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

    • பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயன மூலப்பொருள் வைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின.
    • காலை நேரத்தில் விபத்து ஏற்பட்ட நிலையில் தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

    பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயன மூலப்பொருள் வைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின. காலை நேரத்தில் விபத்து ஏற்பட்ட நிலையில் தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    சிவகாசி அருகே நேற்று முன்தினம் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 10 பேரை பலியாகினர். படுகாயம் அடைந்த 14 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று மேலும் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் இந்த மாதத்தில் மட்டும் 5வது முறையாக பட்டாசு ஆலையில் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×