search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேர்வு குளறுபடி: விசாரணை குழு அமைக்க டிஎன்பிஎஸ்சி-க்கு ஐகோர்ட் உத்தரவு
    X

    தேர்வு குளறுபடி: விசாரணை குழு அமைக்க டிஎன்பிஎஸ்சி-க்கு ஐகோர்ட் உத்தரவு

      சென்னை:

      2011ல் குரூப் 2 தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற சாய்புல்லா என்பவரை தேர்வு செய்ய தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தேர்வாணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பான விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

      அரசுப்பணிக்கு தேர்வில் ஏற்படும் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும். ஒரு மாதத்தில் விசாரணைக்குழுவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் அமைக்க வேண்டும்.

      விசாரணைக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் தேர்வாணையத்துக்கு அறிவுறுத்திய சென்னை ஐகோர்ட், தேர்வாணைய அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை முடித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்து, மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

      Next Story
      ×