search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு இடைத்தேர்தல்: தி.மு.க.-காங்கிரசார் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
    X

    ஈரோடு இடைத்தேர்தல்: தி.மு.க.-காங்கிரசார் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் சித்தோடு சாலை போக்குவரத்து கல்லூரியில் காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.
    • தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் சித்தோடு சாலை போக்குவரத்து கல்லூரியில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதையொட்டி அங்கு அதிகாலை முதலே கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதை தொடர்ந்து மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

    இதில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். இதையொட்டி தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உற்சாகம் அடைந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    Next Story
    ×