search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாக்காளர்களுக்கு தேர்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய முறை
    X

    வாக்காளர்களுக்கு தேர்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய முறை

    • கையேடு, பூத் சிலிப் வழங்கும்போதோ அல்லது தனியாகவோ, வாக்குச்சாவடி அலுவலர் மூலம் வீடுவீடாக வழங்கப்படும்.
    • ஓட்டுபோடும்போது மின்னணு வாக்கு எந்திரத்தில் கவனிக்க வேண்டியவை.

    சென்னை:

    பொதுத் தேர்தல்களில் அதிக அளவில் வாக்காளர்களை வாக்களிக்கச் செய்வதில் ஒவ்வொரு முறையும் இந்திய தேர்தல் கமிஷன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கான புதிய உத்திகளையும் வகுத்து செயல்பட்டு வருகிறது.

    இந்த பாராளுமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதிய நடவடிக்கையாக, வாக்காளர் வசிக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, வாக்காளர் கையேடு என்ற 8 பக்கங்களைக் கொண்ட சிறிய புத்தகத்தை வழங்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

    இந்த கையேடு, பூத் சிலிப் வழங்கும்போதோ அல்லது தனியாகவோ, வாக்குச்சாவடி அலுவலர் மூலம் வீடுவீடாக வழங்கப்படும். அந்த புத்தகத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்யும் வழிமுறை; அதற்கான விண்ணப்பப் படிவங்களின் விவரங்கள்; வாக்காளர் பட்டியலில் பெயரை ஆன்லைனில் தேடும் முறை; வாக்குச்சாவடி இருக்கும் இடத்தை அறியும் முறை;

    வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டால் மாற்று ஆவணங்கள் பற்றிய விவரங்கள்; வரிசையில் நிற்பதில் இருந்து ஓட்டு போடுவதுவரை மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்; ஓட்டுபோடும்போது மின்னணு வாக்கு எந்திரத்தில் கவனிக்க வேண்டியவை;

    இந்திய தேர்தல் கமிஷன் தொடங்கியுள்ள வழிகாட்டி சேவை செயலிகள் பற்றிய விவரங்கள்; வீட்டில் இருந்தே வாக்களிக்கும் தபால் ஓட்டு வசதி; உறுதியாக வாக்களிப்பேன் என்ற உறுதிமொழி போன்ற தகவல்கள் அதில் உள்ளன.

    Next Story
    ×