search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொடர் மின்வெட்டால் அவதி- கிழக்கு கடற்கரை சாலையை மறித்து பொதுமக்கள் நள்ளிரவில் போராட்டம்
    X

    தொடர் மின்வெட்டால் அவதி- கிழக்கு கடற்கரை சாலையை மறித்து பொதுமக்கள் நள்ளிரவில் போராட்டம்

    • மின்சாரம் துண்டிக்கப்பட்ட காரணத்தால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் தூக்கமின்றி தவிப்பு.
    • பொதுமக்களின் போராட்டத்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிப்பு.

    தமிழகத்தில் ஆங்காங்கே அவ்வபோது மின்வெட்டு ஏற்படுவதாக புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில், சென்னைக்கு உட்பட்ட உதண்டி, பனையூர், அக்கரை, ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் மின்தடை ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    இதேபோல், நேற்று இரவு 8 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் நள்ளிரவை கடந்தும் வராததால் பொது மக்கள் அவதியடைந்தனர்.

    மின்சாரம் துண்டிக்கப்பட்ட காரணத்தால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் தூக்கமின்றி தவித்து வருகின்றனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பொதுமக்களின் போராட்டத்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×