search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. முன்னாள் அமைச்சர் உபயதுல்லா மரணம்- பேரன் திருமணத்தை நடத்த இருந்த நிலையில் சோகம்
    X

    தி.மு.க. முன்னாள் அமைச்சர் உபயதுல்லா மரணம்- பேரன் திருமணத்தை நடத்த இருந்த நிலையில் சோகம்

    • 4 முறை தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
    • உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் கல்லுக்குளம் பகுதியை சேர்ந்தவர் உபயதுல்லா (வயது 83). தி.மு.க மூத்த தலைவர்.

    இவர் 4 முறை தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார். இதில் கடந்த 2006-2011 காலகட்டத்தில் தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி ஆட்சியின் போது வணிகவரித்துறை அமைச்சராக இருந்தார். தற்போது தி.மு.க மாநில வர்த்தக அணி தலைவராக பதவி வகித்து வந்தார்.

    இந்நிலையில் இன்று தஞ்சையில் உள்ள ஒரு மண்டபத்தில் உபயதுல்லாவின் பேரனுக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்த திருமணத்தை இவர் தலைமை தாங்கி நடத்த இருந்தார். இதற்காக இன்று காலை புறப்பட்டு கொண்டிருந்தார்.

    அப்போது இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது.

    இதையடுத்து தஞ்சையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட உள்ளது. ஏராளமான தி.மு.க.வினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் உபயதுல்லா உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர்.

    மறைந்த உபயதுல்லாவின் மனைவி மற்றும் மகன் ஏற்கனவே இறந்து விட்டனர். தற்போது ஒரு மகள் மட்டும் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரறிஞர் அண்ணா விருதை உபயதுல்லாவுக்கு , முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். மேலும் உபயதுல்லா தி.மு.க.வில் பல்வேறு பதவிகளை வகித்து வந்தார். குறள் நெறி செல்வராக அழைக்கப்பட்டார். அவரது மரணம் கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×