search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் திடீர் மோதல்: அறிவிப்பு பலகை வைக்க வலியுறுத்தல்
    X

    திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் திடீர் மோதல்: அறிவிப்பு பலகை வைக்க வலியுறுத்தல்

    • பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் ராஜகோபுரம் வழியாக மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பக்தர்களை விலக்கிவிட்டு சமாதானம் செய்து அனுப்பினர்.

    வேங்கிக்கால்:

    ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர்.

    இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது.

    நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் ராஜகோபுரம் வழியாக மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    புத்தாண்டு தினத்தில் 3 முதல் 4 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர். அம்மணி அம்மன் கோபுரம் வழியாக வருவாய் துறை, காவல்துறை, அறநிலையத்துறை உள்ளிட்ட துறையினரால் அழைத்து வரப்படும் வி.ஐ.பி.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதை பார்த்த வெளிமாநில பக்தர்கள் அங்கு காத்திருந்தனர்.

    நேற்று காலை சுமார் 11 மணியளவில் அம்மணி அம்மன் கோபுர கதவு பூட்டப்பட்டிருந்து. இந்நிலையில் அரசு துறையினரால் அழைத்து வரப்படும் வி.ஐ.பி.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்காக கோபுர வாசல் கதவுகள் திறக்கப்பட்டது. அப்போது அங்கு காத்திருந்த பக்தர்கள் முண்டி அடித்துக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்ததால் பக்தர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பக்தர்களை விலக்கிவிட்டு சமாதானம் செய்து அனுப்பினர்.

    இது குறித்து பக்தர்கள் கூறுகையில் அருணாசலேசுவரர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்த கோபுர வாசல் வழியாக தரிசனத்திற்கு செல்வது என்பது குறித்து முறையான அறிவிப்பு பலகையோ, வழிகாட்டி பதாகைகளோ வைக்கப்படுவதில்லை. நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியுள்ளது. 5-ம் பிரகாரத்தில் திருப்பதியில் உள்ளதைப்போல் பக்தர்கள் அமர்ந்து காத்திருக்கும் அறைகள் அமைக்க வேண்டும். இந்த அறைகளில் கழிவறை வசதிகள் செய்யப்பட வேண்டும்.

    அதிக அளவில் வரும் பக்தர்களின் நலன் கருதி தரிசன முறையில் உரிய மாற்றம் கொண்டு வர இந்து சமய அறநிலையத்துறை முன்வர வேண்டும் என வலியுறுத்தினர்.

    Next Story
    ×