search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் 180 இடங்களில் தீபாவளி பட்டாசு தீ விபத்து
    X

    சென்னையில் 180 இடங்களில் தீபாவளி பட்டாசு தீ விபத்து

    • வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என அனைத்து பகுதிகளிலும் மக்கள் உற்சாகத்தோடு பட்டாசுகளை வெடித்ததில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
    • ராக்கெட் பட்டாசுகள் பறந்து சென்று விழுந்ததிலேயே பெரும்பாலான தீ விபத்துகள் நடந்துள்ளன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை யொட்டி தமிழகம் முழுவதும் பட்டாசுகளை வெடித்து மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவருமே ராக்கெட் பட்டாசுகளையும் வெடிக்க செய்தனர்.

    நேற்று சென்னையில் மட்டும் 180 இடங்களில் தீபாவளி பட்டாசு தீ விபத்துகள் நடந்துள்ளன.

    வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என அனைத்து பகுதிகளிலும் மக்கள் உற்சாகத்தோடு பட்டாசுகளை வெடித்ததில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதுபற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    ராக்கெட் பட்டாசுகள் பறந்து சென்று விழுந்ததிலேயே பெரும்பாலான தீ விபத்துகள் நடந்துள்ளன.

    இந்த தீவிபத்தில் 14 குழந்தைகள் உள்பட 43 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் 20 பேர் ஆண்கள். 9 பேர் பெண்கள் ஆவர்.

    தீவிபத்தில் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்றனர்.

    கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும் தீக்காய சிகிச்சை பிரிவு செயல்பட்டது. அங்கு சென்றும் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்றனர். இருப்பினும் தீபாவளி பட்டாசு தீவிபத்தில் பெரிய அளவில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது ஆறுதல் அளிப்பதாக இருப்பதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    Next Story
    ×