search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அருகே செக்கானூர் காவிரி ஆற்றில் இறந்து மிதந்த மீன் குஞ்சுகள்
    X

    செக்கானூர் காவிரி ஆற்றங்கரை பகுதியில் சிறிய மீன் குஞ்சுகளை கருவாடாக மாற்ற பாறை மீது காய வைத்துள்ளனர்.

    மேட்டூர் அருகே செக்கானூர் காவிரி ஆற்றில் இறந்து மிதந்த மீன் குஞ்சுகள்

    • மின் நிலைய பராமரிப்புக்காக தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
    • காவிரி ஆற்றில் சிறிய வகை மீன் குஞ்சுகள் ஏராளமாக செத்து மிதந்தன.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த செக்கானூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை மின்நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் கதவனை மின் நிலையத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது.

    இதனால் காவிரி ஆற்றில் சிறிய வகை மீன் குஞ்சுகள் ஏராளமாக செத்து மிதந்தன. இதனைக் கண்ட அந்த கிராம மக்கள் மீன்குஞ்சுகளை குவியலாக அள்ளிச் சென்றனர். ஒரு சிலர் மீன் குஞ்சுகளை ஆற்றங்கரையில் உள்ள பாறைகளில் காய வைத்து கருவாடாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×