என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தொடர்ந்து பலத்த மழை: பூண்டி ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 2,500 கன அடியாக அதிகரிப்பு
- இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 2600 கனஅடியாக உயர்ந்தது.
- பூண்டி ஏரியில் மொத்தம் 3231 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
திருவள்ளூர்:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியின் மொத்த உயரம் 35 அடி. கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது.
இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று முன்தினம் ஏரியின் நீர்மட்டம் 34 அடியை எட்டியது. மேலும் ஏரிக்கு வரும் நீர்வரத்தும் 1000 கனஅடியை தாண்டியது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை பூண்டி ஏரியில் இருந்து முதல்கட்டமாக 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
நேற்று அது 1684 கனஅடியாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் பூண்டி மற்றும் ஆந்திரா பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பூண்டி ஏரிக்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரித்து உள்ளது.
இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 2600 கனஅடியாக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து ஏரியின் பாதுகாப்பு கருதி உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது.
காலை 9 மணியளவில் ஏரியில் இருந்து 2 மதகுகள் வழியாக 2500 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. இந்த தண்ணீரால் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது.
இதைத்தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளி வாயல்சாவடி, நாப்பாளையம், இடையான் சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் பகுதியில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
பூண்டி ஏரியில் மொத்தம் 3231 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியில் 2902 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஏரி முழுவதும் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. பூண்டி ஏரிக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான் 3645 மி.கனஅடியில் 2860 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 843 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 2237 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 421 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்