search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை-புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை: செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் 90 சதவீதம் நிரம்பியது
    X

    புழல் ஏரி

    சென்னை-புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை: செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் 90 சதவீதம் நிரம்பியது

    • கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு பலத்த மழை கொட்டி வருகிறது.
    • செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளவு 3645 மி.கனஅடி. இதில் 3292 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

    பூண்டி ஏரியில் மதகு, கால்வாய் சீரமைப்பு பணி நடைபெறுவதையொட்டி கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வேண்டாம் என்று ஏற்கனவே தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இதனால் கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கு அனுப்புவது நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து பூண்டி ஏரியில் சீரமைப்பு பணி நடைபெறுவதையடுத்து ஏரியில் இருந்த தண்ணீர் முழுவதையும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருந்தது. தற்போது தொடர்ந்து பூண்டி ஏரி தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தண்ணீர் முழுவதும் நிரம்பி வருகிறது. இந்த 2 ஏரிகளிலும் 90 சதவீதம் தண்ணீர் உள்ளது.

    இதேபோல் கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் மழை நீரும் குடிநீர் ஏரிகளுக்கு அதிக அளவு வரத் தொடங்கி உள்ளன.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி ஆகும். இதில் 636 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. தண்ணீர் வரத்து இல்லை. 315 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி இதில் 2994 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 256 கன அடி தண்ணீர் வருகிறது. சென்னை குடிநீர் தேவைக்காக 201 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளவு 3645 மி.கனஅடி. இதில் 3292 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 127 கனஅடி தண்ணீர் வருகிறது. குடிநீருக்காக 185 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியில் 132 மி.கனஅடி தண்ணீரும் (மொத்த கொள்ளவு 1081 மி.கனஅடி) கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் முழு கொள்ளவான 500 மி.கனஅடி தண்ணீரும் உள்ளது.

    Next Story
    ×