search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அம்பலமாகிவரும் பாஜக-வினரின் சதிச்செயல்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
    X

    "அம்பலமாகிவரும் பாஜக-வினரின் சதிச்செயல்": சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

    • சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    • தமிழ்நாடு காவல்துறை தீவிரமாக தனது விசாரணையை விரிவுபடுத்தி இருக்கிறது.

    cசென்னை, கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பாதுகாப்பு மிகுந்த ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக, தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரவுடி கருக்காக வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் இந்த விவகாரம் பாஜகவினரின் சதித்திட்டம் என சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு எரிபொருள் நிரப்பிய புட்டியை வீசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள வினோத்தை சிறையில் இருந்து பிணையில் எடுத்த வழக்கறிஞர் பாஜக-வில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

    ஏற்கனவே பாஜக அலுவலகம் முன்பு இதே போல் தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த வினோத்தை, பாஜக வழக்கறிஞரே பிணையில் எடுத்துள்ளது வேறொரு சந்தேகத்தை கிளப்புகிறது.

    இந்த கோணத்திலும் தமிழ்நாடு காவல்துறை தீவிரமாக தனது விசாரணையை விரிவுபடுத்தி இருக்கிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×