search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்திய கலெக்டர்
    X

    கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மாணவர்களுக்கு பாடம் நடத்தியதை காணலாம்.

    அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்திய கலெக்டர்

    • நியூட்டன் விதி சார்ந்த கேள்விகளை கேட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, நியூட்டனின் 3 விதிகளையும் படித்து காட்டினார்.
    • கலெக்டரே ஆசிரியராக மாறி பாடம் நடத்தியதால் மாணவ-மாணவிகளும் உற்சாகமாக பாடங்களை கவனித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வளர்ச்சித்திட்ட பணிகளை பார்வையிட செல்லும் பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் இருந்தால் உடனடியாக அங்கு சென்று மாணவ-மாணவிகளை சந்தித்து கலந்துரையாடுவது வழக்கம்.

    அதன்படி நேற்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பெருந்துறை பெரியவீரசங்கிலி ஊராட்சிக்கு சென்றார். கைக்கோளபாளையத்தில் உள்ள பெரியவீரசங்கிலி அரசு உயர்நிலைப்பள்ளியில் புதிய கழிவறை கட்டும் பணியை பார்வையிட்டார். அப்போது மாணவ-மாணவிகளை பார்த்ததும் உற்சாகம் அடைந்த கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழக்கம்போல அவர்களுடன் கலந்துரையாடினார்.

    மேலும் 10-ம் வகுப்பு அறைக்கு கலெக்டர் சென்றபோது, மாணவ-மாணவிகள் படித்துக்கொண்டு இருந்தனர். அங்கு ஒரு புத்தகத்தை வாங்கிய அவர், அவர்கள் படித்துக்கொண்டு இருந்த அறிவியல் பாடம் தொடர்பாக கேள்விகள் கேட்டார். மாணவ-மாணவிகளும் உற்சாகமாக பதில் அளித்தனர்.

    அப்போது நியூட்டன் விதி சார்ந்த கேள்விகளை கேட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, நியூட்டனின் 3 விதிகளையும் படித்து காட்டினார். மேலும் சிறிது நேரம் பாடம் நடத்தினார். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பதை மாணவ-மாணவிகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு பாட்டில் எடுத்து அதை மேஜையில் உருட்டி செய்முறை விளக்கமும் அளித்தார். கலெக்டரே ஆசிரியராக மாறி பாடம் நடத்தியதால் மாணவ-மாணவிகளும் உற்சாகமாக பாடங்களை கவனித்தனர்.

    Next Story
    ×