என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மக்கள் பணியை ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்- அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
- மக்கள் கோரும் சான்றிதழ்களை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வேண்டும்.
- பெரும் நம்பிக்கையுடன் அதிகாரிகளை மக்கள் அணுகுகிறார்கள். மக்கள் கொடுக்கும் மனுக்கள் வெறும் காகிதங்கள் அல்ல.
மதுரை:
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மதுரையில் இன்று 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் மு.கஸ்டாலின் பேசியதாவது:
* தென் மாவட்டங்களை பொருளாதார ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் மேம்படுத்த வேண்டும்.
* மக்கள் கோரும் சான்றிதழ்களை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வேண்டும்.
* மக்கள் பணியை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்.
* பெரும் நம்பிக்கையுடன் அதிகாரிகளை மக்கள் அணுகுகிறார்கள். மக்கள் கொடுக்கும் மனுக்கள் வெறும் காகிதங்கள் அல்ல.
* மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், குழந்தைகள் ஆகியோரின் தேவைகளை அறிந்து செயல்பட வேண்டும்.
* மாவட்டங்களுக்கு ஏற்ப சிறப்பு தேவைகளை நிறைவேற்றி தர வேண்டும்.
* மாவட்டத்திற்கு உரிய தனிப்பட்ட சிறப்பு தேவைகளை உணர்த்த திட்டங்களை வகுக்க வேண்டும்.
* ஆட்சியர்களின் உத்தரவுகள் செயல்படுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்
* கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* விவசாயிகள், தொழிலாளர்களுக்கு வேலை உறுதி திட்டங்களை வகுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.






