search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேதமான சோபா, மெத்தை வீட்டிற்கே வந்து சேகரிக்கப்படும்- சென்னை மாநகராட்சி ஏற்பாடு
    X

    சேதமான சோபா, மெத்தை வீட்டிற்கே வந்து சேகரிக்கப்படும்- சென்னை மாநகராட்சி ஏற்பாடு

    • தெருக்களில் துர்நாற்றம் வீசுகிறது. போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.
    • குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பல மின் சாதன பொருட்களும் நாசமானது.

    சென்னை:

    'மிச்சாங்' புயல் காரணமாக பெய்த பலத்த மழை காரணமாக சென்னை வெள்ளத்தில் மிதந்தது. இதனால் தரைதளத்தில் உள்ள ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. பல வீடுகளில் 6 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றது.

    இதனால் வீடுகளில் உள்ள மெத்தை, சோபா, கட்டில், நாற்காலி, மேஜை, துணிமணிகள், புத்தகங்கள் ஆகியவை சேதம் அடைந்தன. மேலும் பல வீடுகளில் டி.வி, வாஷிங் மிஷின், குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பல மின் சாதன பொருட்களும் நாசமானது.

    வெள்ளம் வடிந்த பிறகு வீடுகளுக்கு திரும்பிய மக்கள் மழை வெள்ளத்தால் சேதமான சோபா, மெத்தை உள்ளிட்ட பொருட்களை வீடுகளுக்கு வெளியே உள்ள தெருக்களிலும், அருகில் உள்ள குப்பை தொட்டிகளிலும் வீசினார்கள். இதன் காரணமாக சென்னையில் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களில் அதிக அளவில் குப்பைகள் தேங்கி காணப்படுகிறது. இதனால் தெருக்களில் துர்நாற்றம் வீசுகிறது. போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.

    எனவே வீடுகளில் மழையால் சேதம் அடைந்த மெத்தை, சோபா, கட்டில் உள்ளிட்ட பொருட்களை அருகில் உள்ள குப்பை தொட்டிகள் மற்றும் சாலைகளில் வீச வேண்டாம் என்றும், மாநகராட்சியின் வாகனத்தை போன் செய்து அழைத்தால் அவர்கள் வீட்டிற்கே வந்து சோபா, மெத்தை உள்ளிட்ட கழிவு பொருட்களை சேகரித்து செல்வார்கள் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சென்னை மாநகராட்சி, எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    வீடுகளில் மழைநீரால் சேதம் அடைந்த சோபாக்கள், மெத்தை உள்ளிட்ட பொருட்களை குப்பை தொட்டி அல்லது தெருக்களில் வீசி போக்குவரத்துக்கு இடையூறு செய்ய வேண்டாம். கட்டணம் இல்லாத தொலை பேசி எண்ணான 18005712069 என்ற எண்ணில் அழைத்தால் உங்கள் வீட்டுக்கே வந்து குப்பை கழிவுகளை சேகரித்து செல்வார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×