search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் மீது வழக்குப்பதிவு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் மீது வழக்குப்பதிவு

    • தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது வீட்டில் பணிபுரிந்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.
    • பெண் கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் வீட்டில், வீட்டு வேலை செய்த சிறுமியை கொடுமைபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறுமியை கொடுமைப்படுத்திய எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

    இந்நிலையில் எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் வீட்டில் பணிபுரிந்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ள நீலாங்கரை மகளிர் போலீசார், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மேலும் பெண் கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×