என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பொன்னேரி நகர பாஜக சார்பில் சிறப்பு செயற்குழு கூட்டம்
    X

    பொன்னேரி நகர பாஜக சார்பில் சிறப்பு செயற்குழு கூட்டம்

    • பொன்னேரி பாஜாரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.
    • ஆரணி ஆற்றின் அருகில் சுடுகாட்டின் அருகே கொட்டப்படும் குப்பைகளை அகற்ற வேண்டும்.

    பொன்னேரி:

    பொன்னேரி தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி நகர பாஜக சார்பில் சிறப்பு செயற்குழு கூட்டம் நகரத் தலைவர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய அரசின் நலத்திட்ட மாவட்ட பொறுப்பாளர் கஜேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பொன்னேரி பாஜாரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். நகராட்சி சாலை சீரமைக்க வேண்டும். ஆரணி ஆற்றின் அருகில் சுடுகாட்டின் அருகே கொட்டப்படும் குப்பைகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாவட்ட செயலாளர் மற்றும் பொறுப்பாளர் நந்தன் மாவட்ட செயலாளர் கோட்டி நகரப் பொதுச் செயலாளர் ரமேஷ் கோகுல் பொருளாளர் பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×