என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன்: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன்: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை

    • கோவையில் பா.ஜ.க. வரலாறு காணாத வாக்குகளைப் பெற்றுள்ளது.
    • பா.ஜ.க.வும், கூட்டணி கட்சிகளும் பெற்றது நேர்மையான வாக்குகள்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பாராளுமன்ற தேர்தலில் மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்.

    பா.ஜ.க.வும், கூட்டணி கட்சிகளும் பெற்றது நேர்மையான வாக்குகள்.

    கோவையில் பா.ஜ.க. வரலாறு காணாத வாக்குகளைப் பெற்றுள்ளது.

    கோவையில் நான் பெற்ற 4.50 லட்சம் வாக்குகளும் பணம் கொடுக்காமல் நேர்மையாக கிடைத்த வாக்குகள்.

    தமிழகத்தில் 40-க்கு 40 தொகுதிகள் பெற்ற இந்தியா கூட்டணி சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ஒடிசாவில் தனிப் பெரும்பான்மையோடு பா.ஜ.க. ஆட்சியமைக்க உள்ளது.

    மத்திய அரசின் அனைத்து நலத்திட்டங்களும் மாநில அரசை வந்துசேர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என தெரிவித்தார்.

    Next Story
    ×