search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெங்கல் அருகே வேன் மோதி மின்ஊழியர் பலி
    X

    வெங்கல் அருகே வேன் மோதி மின்ஊழியர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • தலைமறைவான வேன் டிரைவரை தேடிவருகின்றனர்.

    பெரியபாளையம்:

    வெங்கல் அருகே உள்ள ஆலத்தூர் கிராமம், அம்பேத்கர் தெருவில் வசித்து வந்தவர் அர்ஜுனன் (வயது58). இவர் கீழானூர் துணை மின் நிலையத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பணியில் இருந்த அர்ஜுனன் மூலக்கரையில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றார். பின்னர் அவர் மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் அலுவலகம் நோக்கி வந்து கொண்டிருந்தார். மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது பின்னால் வந்த வேன் ஒன்று திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அர்ஜுனன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்படுத்தி விட்டு தலைமறைவான வேன் டிரைவரை தேடிவருகின்றனர்.

    Next Story
    ×