search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு- முதலிடத்தில் இருந்த மாடுபிடி வீரருக்கு காயம்
    X

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு- முதலிடத்தில் இருந்த மாடுபிடி வீரருக்கு காயம்

    • முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு களத்திற்கு சென்று மீண்டும் காளைகளை அடக்கினார்.
    • 9ம் சுற்று முடிவில் அபி சித்தர் 25 காளைகளை அடக்கி முதலிடத்தில் இருந்தார்.

    மதுரை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். காளையர்களின் பிடியில் சிக்காமல் பெரும்பாலான காளைகள் கெத்து காட்டின.

    7 சுற்றுகளின் நிறைவில் அபி சித்தர் என்ற வீரர் 23 காளைகளை அடக்கி முன்னிலையில் இருந்தார். அதன்பின்னர் ஒரு காளையை அடக்கும் முயற்சியில் எதிர்பாராத விதமாக காவலதுறையினரின் வேனில் மோதி காயமடைந்தார். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் அவர் களத்திற்கு சென்று மீண்டும் காளைகளை அடக்கினார்.

    9ம் சுற்று முடிவில் அபி சித்தர் 25 காளைகளை அடக்கி முதலிடத்தில் இருந்தார். அஜய் 19 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்திலும், ரஞ்சித் குமார் 12 காளைகளை அடக்கி மூன்றாம் இடத்திலும் இருந்தனர்.

    Next Story
    ×