search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. வெற்றிபெற வேண்டி சமயபுரம் மாரியம்மனுக்கு அக்னிசட்டி எடுத்து வழிபட்ட நடிகர் கஞ்சா கருப்பு
    X

    அக்னிசட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்திய நடிகர் கஞ்சா கருப்பு. 

    அ.தி.மு.க. வெற்றிபெற வேண்டி சமயபுரம் மாரியம்மனுக்கு அக்னிசட்டி எடுத்து வழிபட்ட நடிகர் கஞ்சா கருப்பு

    • ஜெயிக்க பிறந்தவர்கள் ஜெயித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
    • எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுடைய கஷ்டங்கள் நஷ்டங்கள் தெரியும்.

    மண்ணச்சநல்லூர்:

    நடிகர் கஞ்சாகருப்பு தனது குடும்பத்தினருடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்தார். அம்மனுக்கு அவர் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினார். அக்னி சட்டியை அவர் கோவிலில் இறக்கி வைக்கும்போது பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வேண்டும் என்று கூறியவாறு வணங்கினார். பின்னர் அம்மனை தரிசனம் செய்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. எல்லா தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வேண்டும் என சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டி நேர்த்திக் கடனை செலுத்தியுள்ளேன். பல்வேறு மாவட்டங்களில் தற்போது பிரச்சாரம் செய்து வருகிறேன். சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டுவது நிச்சயம் நடக்கும்.

    எதிர்க்கட்சியினர்கள் எடப்பாடி பழனிசாமியை பாதந்தாங்கி பழனிச்சாமி என விமர்சிக்கிறார்கள். காமெடி பண்ணுவது பண்ணிக்கொண்டுதான் இருப்பார்கள். ஜெயிக்க பிறந்தவர்கள் ஜெயித்துக் கொண்டுதான் இருப்பார்கள். எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயி. அவருக்கு விவசாயிகளுடைய கஷ்டங்கள் நஷ்டங்கள் தெரியும். தூற்று பவர்கள் தூற்றிக்கொண்டே இருக்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×