என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று கூடுதல் உபரிநீர் திறப்பு
- செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் மொத்தம் உள்ள 24 அடியில் 23.60 அடியை தொட்டு உள்ளது.
- செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
பூந்தமல்லி:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான செம்பரம்பாக்கம் ஏரிக்கு கடந்த ஒரு மாதமாக பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. மேலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் மொத்தம் உள்ள 24 அடியில் 23.60 அடியை தொட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் அனுப்புவது ஏற்கனவே நிறுத்தப்பட்டது.
வழக்கமாக ஏரியில் 23 அடியை தாண்டினால் உபரி நீர் வெளியேற்றப்படுவது வழக்கம். இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று முதல் கட்டமாக 250 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. மேலும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவும் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 775 கனஅடியாக அதிகரித்து உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு இன்று காலை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மேலும் 250 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
தற்போது ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் மொத்தம் 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே உபரி நீர் வெளியேற்றத்தை அதிகரிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
கடந்த 2015-ம் ஆண்டு கடும் வெள்ள பாதிப்பின்போது கூட செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 23.50 அடியில் தான் இருந்தது. அதன் பிறகு தற்போது கோடை காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் 23.60 அடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து ஏரிக்கு நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியை கண்காணித்து வருகின்றனர். செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி ஆகும். இதில் 3540 மி.கனஅடிக்கு தண்ணீர் உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்