search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இருப்பு 72 சதவீதம்
    X

    செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இருப்பு 72 சதவீதம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னை குடிநீர் தேவைக்காக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 156 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
    • கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 344 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    சென்னை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல் செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது குடிநீர் ஏரிகளில் 6,816 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 58 சதவீதம் ஆகும்.

    குடிநீர் ஏரிகளில் அதிகபட்சமாக செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இருப்பு 72 சதவீதம் உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி. இதில் 2,623 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து இல்லை. சென்னை குடிநீர் தேவைக்காக 156 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231மி.கனஅடி. இதில் 1803மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் 130 கனஅடி வந்து கொண்டு இருக்கிறது. 70 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081மி.கனஅடியில் 110மி.கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300மி.கனஅடியில் 1936மி.கனஅடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. ஏரிக்கு 258கனஅடி தண்ணீர் வருகிறது. 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 344 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    பூண்டி எரிக்கு ஏற்கனவே கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளிலும் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் சென்னை நகரில் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×