search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 3145 சிறப்பு பஸ்கள்
    X

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 3145 சிறப்பு பஸ்கள்

    • பயணிகள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • பொங்கலுக்கு பின் 16.1.24 முதல் 18.1.24 வரை அவரவர் ஊர்களுக்கு திரும்பிச் செல்ல சென்னை தடத்தில் 1460 சிறப்பு பஸ்களும் பிற தடங்களில் 1151 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை, 16-ந் தேதி மாட்டுப்பொங்கல், 17-ந் தேதி காணும் பொங்கல் என அடுத்தடுத்து தொடர் விடுமுறை நாட்கள் வருகிறது.

    இது தவிர 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் (சனி, ஞாயிறு) வாரவிடுமுறை என்பதால் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது.

    இதனால் பயணிகள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    அதன்படி 11-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 14-ந் தேதி (ஞாயிறு) வரை கூடுதலாக சிறப்பு பஸ்கள் சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகிறது.

    இதேப்போல் திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இயக்கப்பட உள்ளது.

    மேலும் 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில், தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது .

    கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, ஒரத்தநாடு தட பஸ்கள், தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்திலிருந்தும், கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் தட பஸ்கள் கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர் பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது .

    மேலும், பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில்சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

    பொங்கலுக்கு முன் 11.1.2024 முதல் 14.1.2024 வரை 4 நாட்களுக்கு சென்னையிலிருந்து மேற்படி இடங்களுக்கு 1850 சிறப்பு பஸ்களும், கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்குடி தடங்களில் 1295 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 3145 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    அதேபோன்று பொங்கலுக்கு பின் 16.1.24 முதல் 18.1.24 வரை அவரவர் ஊர்களுக்கு திரும்பிச் செல்ல சென்னை தடத்தில் 1460 சிறப்பு பஸ்களும் பிற தடங்களில் 1151 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

    எனவே பயணிகள் முன்பதிவு செய்வதன் மூலம் சிரமமம் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்துக் கழகங்கள் கணித்து அதற்கேற்ப பஸ் சேவையை அளிக்க ஏதுவாகும் . மொபைல் செயலி மூலமும் முன்பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×