என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தொழில் அதிபர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளையில் சென்னையை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேர் கைது
    X

    தொழில் அதிபர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளையில் சென்னையை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேர் கைது

    • 150 பவுன் நகை, மற்றும் ரூ. 5 1/2 லட்சம்ரொக்கம், 5 கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.
    • கொள்ளையடித்த நகைகளை கிணற்றில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், பச்சையப்பன் மகளிர் கல்லூரி அருகே உள்ள கண்ணப்பன் தெருவில் வசித்து வருபவர் சத்தியமூர்த்தி. தொழில் அதிபர். இவர் ரங்கசாமி குளம் பகுதியில் சிமெண்ட், கம்பி, டைல்ஸ், பெயிண்ட், உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

    கடந்த 13-ந்தேதி சுந்தரமூர்த்தி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றார். அவர் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 150 பவுன் நகை, மற்றும் ரூ. 5 1/2 லட்சம்ரொக்கம், 5 கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போய் இருந்தது. மர்ம கும்பல் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு நகை-பணத்தை அள்ளி சென்று இருந்தனர்.

    இதுகுறித்து விஷ்ணுகாஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை தொடர்பாக காஞ்சிபுரத்தை சேர்ந்த குணசேகரன், சென்னையை சேர்ந்த ராஜன், சிவவிநாயகம் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    கொள்ளையடித்த நகைகளை அவர்கள், திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகே திருப்பணமூரில் சாலையோரம் உள்ள கிணற்றில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பேசில் பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் தேடினர். அப்போது ஒரு பையில் 62 பவுன் நகையை மீட்டனர்.

    மேலும் கைதான 3 பேரிடமும் மீதி நகை மற்றும் ரொக்கப்பணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×