என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
குடியாத்தம் அருகே தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியில் மீண்டும் கொரோனா பரிசோதனை
Byமாலை மலர்25 April 2022 5:35 AM GMT (Updated: 25 April 2022 5:35 AM GMT)
தமிழக எல்லைப்புற பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் சுகாதாரத்துறை சார்பில் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
குடியாத்தம்:
மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி தமிழக அரசும், சுகாதாரத்துறையும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் முதல் கட்டமாக தமிழக எல்லைப்புற பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் சுகாதாரத்துறை சார்பில் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மருத்துவ பணிகள் துணை இயக்குனர் பானுமதி உத்தரவின் பேரில் குடியாத்தம் அடுத்த சைனகுண்டா கிராமம் ஆந்திர மாநில எல்லை பகுதி சோதனைச்சாவடியில் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குள் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
குடியாத்தம் வட்டார மருத்துவ அலுவலர் விமல்குமார் மேற்பார்வையில் மருத்துவர் தயாளன், சுகாதார ஆய்வாளர் கபாலீஸ்வரன் ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் மற்றும் பணியாளர்கள் ஆந்திரா மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சைனகுண்டா சோதனைச்சாவடி தாண்டி குடியாத்தம் வரும் வாகனங்களை நிறுத்தி அதில் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறவுறுத்தினர். முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர்.
மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி தமிழக அரசும், சுகாதாரத்துறையும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் முதல் கட்டமாக தமிழக எல்லைப்புற பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் சுகாதாரத்துறை சார்பில் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மருத்துவ பணிகள் துணை இயக்குனர் பானுமதி உத்தரவின் பேரில் குடியாத்தம் அடுத்த சைனகுண்டா கிராமம் ஆந்திர மாநில எல்லை பகுதி சோதனைச்சாவடியில் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குள் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
குடியாத்தம் வட்டார மருத்துவ அலுவலர் விமல்குமார் மேற்பார்வையில் மருத்துவர் தயாளன், சுகாதார ஆய்வாளர் கபாலீஸ்வரன் ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் மற்றும் பணியாளர்கள் ஆந்திரா மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சைனகுண்டா சோதனைச்சாவடி தாண்டி குடியாத்தம் வரும் வாகனங்களை நிறுத்தி அதில் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறவுறுத்தினர். முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X