search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சமூக வலைதளங்களில் பரவி வரும் கியாஸ் சிலிண்டருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் போஸ்டர்
    X
    சமூக வலைதளங்களில் பரவி வரும் கியாஸ் சிலிண்டருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் போஸ்டர்

    விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய பொதுமக்கள்

    பொது மக்கள் விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து தங்களுடைய வேதனைகள், மனக் குமுறல்களை தெரிவித்து வருகிறார்கள்.

    அந்தியூர்:

    நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு (கியாஸ்) உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

    இதனை கண்டித்து பல மாநிலங்களில் எதிர்க் கட்சிகள் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகின்றன.

    மேலும் ஒரு சில இடங்களில் பொது மக்கள் விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து தங்களுடைய வேதனைகள், மனக் குமுறல்களை தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் அப்பகுதி பொதுமக்கள் சிலிண்டருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் போஸ்டர் ஒட்டி தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த போஸ்டர் சமூக வலை தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

    அந்த போஸ்டரில் 2014-ம் ஆண்டு சிலிண்டர் விலை ரூ.410 ஆக இருந்தது என்றும் தற்போது 2022-ம் ஆண்டு 980 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றும் கடுமையான விலை ஏற்றத்தால் எங்களை விட்டு வெகு தூரம் சென்ற உன்னை நினைத்து ஏங்கும் இல்லத்தரசிகள் என்று வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.

    Next Story
    ×