search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திமுக
    X
    திமுக

    காட்டுமன்னார்கோவில் பேரூராட்சியில் ஒரே கட்சியில் மாமனார்-மருமகள் போட்டி

    தி.மு.க.வில் மாமனாரும், மருமகளும் பக்கத்து பக்கத்து வார்டுகளில் போட்டியிடுவது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பேரூராட்சியில்18 வார்டுகள் உள்ளன. தலைவர் பதவி பொது என அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.,வில் முன்னாள் பேரூராட்சி தலைவர் கணேசமூர்த்தி, 5-வது வார்டு தமிழ்செல்வன், 10-வது வார்டு கிருஷ்ண மூர்த்தி, 18 வது வார்டு ராமலிங்கம் உள்ளிட்ட 6 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

    மற்ற 9 பேர் புதிய முகங்களாக தேர்வு செய்யப்பட்டு களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் தி.மு.க., நகர செயலாளர் முன்னாள் தலைவர் கணேசமூர்த்தி மீண்டும் 17 -வது வார்டில் போட்டியிடுகிறார். இவரது மருமகள் ஆனந்தி வசந்த் 15-வது வார்டில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தி.மு.க.வில் மாமனாரும், மருமகளும் பக்கத்து பக்கத்து வார்டுகளில் போட்டியிடுவதுஅந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×