என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
காட்டுமன்னார்கோவில் பேரூராட்சியில் ஒரே கட்சியில் மாமனார்-மருமகள் போட்டி
Byமாலை மலர்5 Feb 2022 11:21 AM GMT (Updated: 5 Feb 2022 11:28 AM GMT)
தி.மு.க.வில் மாமனாரும், மருமகளும் பக்கத்து பக்கத்து வார்டுகளில் போட்டியிடுவது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பேரூராட்சியில்18 வார்டுகள் உள்ளன. தலைவர் பதவி பொது என அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.,வில் முன்னாள் பேரூராட்சி தலைவர் கணேசமூர்த்தி, 5-வது வார்டு தமிழ்செல்வன், 10-வது வார்டு கிருஷ்ண மூர்த்தி, 18 வது வார்டு ராமலிங்கம் உள்ளிட்ட 6 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மற்ற 9 பேர் புதிய முகங்களாக தேர்வு செய்யப்பட்டு களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் தி.மு.க., நகர செயலாளர் முன்னாள் தலைவர் கணேசமூர்த்தி மீண்டும் 17 -வது வார்டில் போட்டியிடுகிறார். இவரது மருமகள் ஆனந்தி வசந்த் 15-வது வார்டில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தி.மு.க.வில் மாமனாரும், மருமகளும் பக்கத்து பக்கத்து வார்டுகளில் போட்டியிடுவதுஅந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X