என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
மஞ்சூரில் 15 மாணவர்களுக்கு கொரோனா தொற்றால் அரசு பள்ளி மூடல்
Byமாலை மலர்13 Jan 2022 4:15 AM GMT (Updated: 13 Jan 2022 4:15 AM GMT)
மஞ்சூர் காத்தாடிமட்டம் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர் ஒருவருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து மற்ற மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.
மஞ்சூர்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மஞ்சூர் காத்தாடிமட்டம் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர் ஒருவருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து மற்ற மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 14 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பின்னர் சுகாதாரத்துறையினர் வகுப்பறை முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர். இதேபோல் மஞ்சூர் மேல்முகாமில் மின்வாரிய ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பிக்கட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சாய்கிஷோர் தலைமையிலான மருத்துவகுழுவினர் மின்வாரிய ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். முள்ளிமலை, கீழ்குந்தா, உள்பட பல்வேறு பகுதிகளிலும் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து குடியிருப்பு பகுதிகளில் கீழ்குந்தா பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளித்து சுகாதார நடவடிக்கைளை தீவிரப்படுத்தினர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மஞ்சூர் காத்தாடிமட்டம் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர் ஒருவருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து மற்ற மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 14 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பின்னர் சுகாதாரத்துறையினர் வகுப்பறை முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர். இதேபோல் மஞ்சூர் மேல்முகாமில் மின்வாரிய ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பிக்கட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சாய்கிஷோர் தலைமையிலான மருத்துவகுழுவினர் மின்வாரிய ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். முள்ளிமலை, கீழ்குந்தா, உள்பட பல்வேறு பகுதிகளிலும் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து குடியிருப்பு பகுதிகளில் கீழ்குந்தா பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளித்து சுகாதார நடவடிக்கைளை தீவிரப்படுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X